ADDED : மார் 12, 2026 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஹ்ரான்: அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலின்போது, மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்., 28ல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை துவக்கின. முதல் நாள் நடந்த தாக்குதல்களில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடைய மனைவி, மருமகள், பேரக் குழந்தைகள் என, பல உறவினர்களும் உயிரிழந்தனர்.
கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி, தற்போது நாட்டின் உச்சத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். போரின் முதல் நாளில் நடந்த தாக்குதலின்போது, இவருக்கு, காலில் எலும்பு முறிவு மற்றும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

