பிரிட்டன் மன்னர் சார்லஸ் கேன்சர் சிகிச்சையில் முன்னேற்றம் : அரண்மனை மகிழ்ச்சி
பிரிட்டன் மன்னர் சார்லஸ் கேன்சர் சிகிச்சையில் முன்னேற்றம் : அரண்மனை மகிழ்ச்சி
UPDATED : ஏப் 27, 2024 03:31 PM
ADDED : ஏப் 27, 2024 03:22 PM

லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லசுக்கு அளித்த கேன்சர் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரண்மனை வட்டார செய்தி தெரிவிக்கிறது.
பிரிட்டன் மன்னர் சார்லசுக்கு கடந்த பிப்ரவரியில் உடல்நலக்குறைவு காரணமாக நடந்த சோதனையில் அவருக்கு சிறுநீர் குழாய் பாதையில் பிராஸ்டேட் கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல் நலன் மோசமடைந்து கவலைக்கிடமாக இருப்பதாக தவறான தகவல் பரவியது. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் வட்டாரம் மறுத்துள்ளது.
டாக்டர்களுக்கு நன்றி
நமது டாக்டர்களின் அற்புதமான சிகிச்சையால் மன்னர் சார்லஸ் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் மக்களை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்தால் டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரண்மனை செய்தி தொடர்பாளர் டாக்டர்கள் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 10 ம் தேதி அரசி கமீலாவுடன் 19 வது திருமண நாளை முன்னிட்டு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
மேலும் முதல் நிகழ்ச்சியாக கேன்சர் மையத்திற்கு சென்று அங்குள்ள மருத்துவ ஊழியர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தொடர்ந்து மன்னர் சார்லஸ் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார் . மேலும் ஜூன் மாதம் ஜப்பான் மன்னர் பிரிட்டன் வரவுள்ளார். இவரை சந்தித்து அவருக்கு மன்னர் சார்லஸ் விருந்தளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

