sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஏ. ஐ., தொழில்நுட்பத்தில் முன்னேறும் இந்திய அமெரிக்கர்கள்

/

ஏ. ஐ., தொழில்நுட்பத்தில் முன்னேறும் இந்திய அமெரிக்கர்கள்

ஏ. ஐ., தொழில்நுட்பத்தில் முன்னேறும் இந்திய அமெரிக்கர்கள்

ஏ. ஐ., தொழில்நுட்பத்தில் முன்னேறும் இந்திய அமெரிக்கர்கள்

7


UPDATED : செப் 06, 2024 01:39 PM

ADDED : செப் 06, 2024 12:45 PM

Google News

UPDATED : செப் 06, 2024 01:39 PM ADDED : செப் 06, 2024 12:45 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு( ஏ.ஐ.,) துறையில் செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டைம்ஸ் இதழ் 100க்கும் மேற்பட்டோரை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , இந்திய அமெரிக்கர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக அந்த இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஏ.ஐ.,க்காக இந்தியா இதுவரை சட்டம் இயற்றவில்லை. ஆனால் இந்த துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தியது.ஏஐ துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது.

இதற்காக அஸ்வினி வைஷ்ணவ் கடுமையாக உழைக்கிறார். நவீன ஏஐ அமைப்புகளுக்கு தேவையான செமி கண்டக்டர் உற்பத்தியில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக, இந்தியா வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் போதுமான அளவு தனியார் ஆராய்ச்சி மற்றும் முதலீடு இல்லை. நவீன உற்பத்தி சூழலும் இல்லை. அதிநவீன ஏஐ மற்றும் செமி கண்டக்டர் மேம்பாட்டிற்கு தேவையான பணியாளர்களை உருவாக்குவதற்கு தேவையான கல்வி கட்டமைப்பும் இல்லை.

ஏ. ஐ., தொழில்நுட்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில் இந்திய அமெரிக்கர்கள் பலர் இருப்பதாக பிரபல டைம் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை உருவாக்கும் நபர்களை குறிப்பிட்டு 'TIME100 Most Influential People in AI 2024' பட்டியலில், கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, சத்திய நாதெல்லா மற்றும் பலர் போன்ற முக்கியமான இந்திய-அமெரிக்கர்கள் உள்ளனர்.

இந்த வருடம், பல இந்திய-அமெரிக்க தலைவர்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளனர், அவர்கள் துறைக்கு முக்கியமான பங்களிப்புகளை செய்கின்றனர். குறிப்பிட்ட நபர்களில் கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் நுண்ணறிவு CEO சுந்தர் பிச்சை; மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னணி CEO சத்திய நாதெல்லா; அமேசானின் செயற்கை பொதுவான நுண்ணறிவின் SVP மற்றும் தலைமை விஞ்ஞானி ரோகித் பிரசாத் ஆகியோர் உள்ளனர், மேலும் பலர் உள்ளனர்.






      Dinamalar
      Follow us