sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நேபாளத்துக்கு ரூ.623 கோடி நிதியுதவி அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

/

நேபாளத்துக்கு ரூ.623 கோடி நிதியுதவி அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

நேபாளத்துக்கு ரூ.623 கோடி நிதியுதவி அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

நேபாளத்துக்கு ரூ.623 கோடி நிதியுதவி அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்


ADDED : ஜன 07, 2024 02:49 AM

Google News

ADDED : ஜன 07, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு,:நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அண்டை நாடான நேபாளம் சென்றுள்ளார்.

அந்நாட்டு பிரதமர் பிரசண்டாவை சந்தித்த அவர், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் மின்சாரத்தை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு வழங்குவது உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெய்சங்கர், காத்மாண்டுவில் உள்ள நுாற்றாண்டு பழமையான சிவன் கோவிலான பசுபதிநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது, அங்கு ருத்ராட்ச மரக்கன்றையும் நட்டார்.

பின், 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட திரிபுவன் பல்கலையின் மத்திய நுாலகம் மற்றும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத்துடன் இணைந்து ஜெய்சங்கர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

நேபாளத்தின் மேற்கு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு குறித்து அறிந்து இந்தியா மிக கவலை அடைந்தது.

அப்போது பிரதமர் மோடி நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் கட்டுமான பணி மேற்கொள்வதற்காக, 623 கோடி ரூபாயை இந்திய அரசு வழங்க உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us