sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/உலகம்/ மாயமான இந்திய மாணவர் ஆற்றில் சடலமாக மீட்பு

மாயமான இந்திய மாணவர் ஆற்றில் சடலமாக மீட்பு

மாயமான இந்திய மாணவர் ஆற்றில் சடலமாக மீட்பு


ADDED : நவ 08, 2025 12:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 12:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாஸ்கோ: ரஷ்யாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவர், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி, 22. இவர், ரஷ்யாவின் உபா நகரில் உள்ள பாஷ்கிர் மருத்துவ பல்கலையில் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார்.

உபாவில் உள்ள விடுதியில் தங்கி படித்த அஜித், கடந்த மாதம் 19ம் தேதி பால் வாங்கப் போவதாகக் கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

விடுதியிலிருந்து சில கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளை ஆற்றங்கரையில் அஜித்தின் உடைகள், மொபைல் போன், கால ணிகள் கண்டெடுக்கப் பட்டன.

கடந்த 19 நாட்களாக அஜித்தை தேடி வந்த நிலையில், ஆற்றுடன் இணைக்கப்பட்ட அணையில், அவரது உடல் மீட்கப்பட்டது. அஜித்தின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us