சிங்கபூரில் பரவியது குரங்கு அம்மை: 10 பேருக்கு பாதிப்பு
சிங்கபூரில் பரவியது குரங்கு அம்மை: 10 பேருக்கு பாதிப்பு
ADDED : ஆக 19, 2024 08:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 10 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதால் அங்கு வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்பாக்ஸ்' என அழைக்கப்படும் குரங்கு அம்மை ('மங்கி பாக்ஸ்') தொற்று ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.
மேலும் மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூரில் 10 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அந்நாட்டு சுகாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

