sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மிஸ்டர் பிலவால் புட்டோ... பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடுது

/

மிஸ்டர் பிலவால் புட்டோ... பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடுது

மிஸ்டர் பிலவால் புட்டோ... பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடுது

மிஸ்டர் பிலவால் புட்டோ... பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடுது

9


ADDED : ஏப் 28, 2025 06:32 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:32 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே பிரதமர் மோடி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசுகையில், 'ஒரே நேரத்தில் ரத்தமும், தண்ணீரும் பாய முடியாது' என உறுதியாக தெரிவித்தார்.

இதை மறைமுகமாக மேற்கோள் காட்டி, பாக்., வெளியுறவு அமைச்சர் பிலவால் புட்டோ சர்தாரி பேசுகையில், ''சிந்து எங்கள் நதி. அது எப்போதும் போல் ஓடும். நதியின் ஓட்டத்தை நிறுத்த முடியாது. ஒரு வேளை தண்ணீரை நிறுத்தினால், இந்தியர்களின் ரத்தம் ஓடும்,'' என, கொக்கரித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் என்பவர் இரு நாட்டு உறவுகளை பேணி பாதுகாக்க வேண்டியவர். ஆனால், இவரோ பதவியேற்ற நாளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக வன்முறை பேச்சுக்களையே பேசி வருகிறார். இவரது தாய் பெனசிர், தாத்தா சுல்பிகர் அலி புட்டோ எல்லாம் இந்தியாவுடன் ஓரளவேனும் நல்லுறவை கொண்டிருந்தனர். சிக்கலான தருணத்தில் இந்தியாவின் உதவியை, ஆதரவை பெற்றிருந்தனர்.

பிலவால் பேச்சுக்கு இந்தியா தரப்பில் பா.ஜ., மூத்த தலைவர் பரத் கோஷ், ''பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அல்-கொய்தாவும் மறுபக்கம் ஆப்கன் தலிபான்களும் பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்து வருகின்றனர். நாங்களும் எங்கள் பங்குக்கு தருவோம். இவர் துவக்கம் முதலே, சிறுபிள்ளைத்தனமாக பேசி வருகின்றார்,'' என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us