இரட்டை கோபுர தகர்ப்பு தினத்தன்று 77 அமெரிக்க வீரர்கள் பலி
இரட்டை கோபுர தகர்ப்பு தினத்தன்று 77 அமெரிக்க வீரர்கள் பலி
ADDED : செப் 11, 2011 11:39 PM
காபூல் : இரட்டை கோபுர தகர்ப்பு 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என, பயங்கரவாதிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, ஆப்கானிஸ்தானின் வார்டாக் மாகாணத்தில் உள்ள செய்யது அபாத் என்ற இடத்தில் உள்ள அமெரிக்கப் படை முகாம் மீது, பயங்கரவாதிகள் ஒரு டிரக்கில் வெடிகுண்டுகளை நிரப்பி நடத்திய தாக்குதலில், 77 அமெரிக்க வீரர்கள் பலியாகினர்; பலர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். சுவீடன் நாட்டின் கோட்போர்க் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த முயன்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.அதிக சகிப்புத்தன்மை வேண்டும்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:பயங்கரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதில், பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. மனித சமூகத்தின் விழுமிய குணங்களான சகிப்புத் தன்மை, மனிதாபிமானம், சகோதரத்துவம் மற்றும் நட்புறவு ஆகியவற்றை சர்வதேச சமூகம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தவறு செய்து விட்டோம்: அதிபர் ஒபாமா கூறுகையில், 'இந்தப் பேரிடரை எதிர்கொள்ள அமெரிக்கா ஒன்று பட்டு நின்றது. நாம் சில தவறுகள் செய்து விட்டோம். நாம் நினைப்பது போல சில விஷயங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் நடந்துவிடாது. எனினும், நாம் அல்-குவைதாவுடன் நாம் போரை எதிர்கொண்டிருக்கிறோம்' என்றார்.