sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பிணைக்கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

/

பிணைக்கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

பிணைக்கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

பிணைக்கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

5


ADDED : ஜன 19, 2025 06:57 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:57 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தில் இருந்து விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளின் பட்டியலை, ஹமாஸ் பகிர்ந்து கொள்ளாத வரையில் காசா போர் நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்கப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். அப்போது, 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை அவர்கள் கடத்திச் சென்றனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது. அந்நாட்டு படைகள் நடத்திய தாக்குதல்களில், காசாவில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்தன.

இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 737 பாலஸ்தீனியர்கள் விடுதலையாகின்றனர். இந்நிலையில், பிணைக் கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவு கூறியிருப்பதாவது: ஒப்புக் கொள்ளப்பட்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலைப் பெறும் வரை நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் முன்னேற மாட்டோம். ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது. முழுப் பொறுப்பும் ஹமாஸிடம் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us