பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 23 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 23 பேர் சுட்டுக்கொலை
ADDED : ஆக 26, 2024 12:14 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். பஸ்சில் சென்று கொண்டிருந்தவர்களை வழிமறித்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (ஆகஸ்ட் 26) முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். இரண்டு வாகனங்களில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு பயங்கரவாதிகள் கொண்டு சென்று சுட்டு படுகொலை செய்தனர். இதில் 23 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ வைப்பு
அவர்கள் வந்த வாகனங்களையும், பயங்கரவாதிகள் தீவைத்து எரித்தனர். முசகேல் உதவி கமிஷனர் நஜீப் கூறியதாவது: பலியானவர்களில் மூன்று பேர் பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள். கடந்த நான்கு மாதங்களாக பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயணிகளை கடத்தி சென்று, அடையாளம் கண்ட பிறகே அவர்களை சுட்டு கொலை செய்துள்ளனர் என்றார்.
கண்டனம்
இந்த கொடூர சம்பவத்துக்கு பலூசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்ரகவாத தாக்குதல் குறித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியதாவது: அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவிப்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம்.
இந்த சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள். பயங்கர வாதிகளின் கோழைத்தனமான தாக்குதmhmf உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.