தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்
தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்
UPDATED : ஏப் 29, 2025 02:32 PM
ADDED : ஏப் 29, 2025 04:14 AM

இஸ்லாமாபாத்: ''இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எங்கள் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப் நேற்று தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாக்., இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்நிலையில், பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்திய ராணுவம் எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எங்கள் படைகளை வலுவூட்டி தயார் நிலையில் வைத்துள்ளோம்.
போர் உருவாகும் சூழல் இருப்பதை அரசிடம் விளக்கி உள்ளோம். 2 - 4 நாட்களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.
எங்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம். எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.