sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போர்ச்சுகலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பாக்., உயரதிகாரிகள்

/

போர்ச்சுகலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பாக்., உயரதிகாரிகள்

போர்ச்சுகலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பாக்., உயரதிகாரிகள்

போர்ச்சுகலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பாக்., உயரதிகாரிகள்


ADDED : ஆக 07, 2025 12:15 AM

Google News

ADDED : ஆக 07, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்:'பாகிஸ்தான் உயரதிகாரிகளில் பாதி பேர் கருப்பு பணத்தில் ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர்' என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

நம் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பிரபலமான அதிகாரிகள்.

பல நுாறு கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய அவர்கள் ஓய்வு வாழ்க்கையை சொகுசாக வாழ நாட்டை விட்டு வெளியேற உள்ளனர்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் உஸ்மான் பஸ்தாருக்கு நெருக்கமான அதிகாரி தன் மகளின் திருமணத்திற்கான பரிசு என்ற பெயரில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். இது தான் பாகிஸ்தானின் நிலைமை. அவர்கள் மிச்சம் வைப்பதே அரசியல்வாதிகளுக்கு. ஆனால் அதிகாரிகள் தப்பித்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது மக்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us