sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

2வது அணு ஆயுத சோதனை வெற்றி; ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

/

2வது அணு ஆயுத சோதனை வெற்றி; ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

2வது அணு ஆயுத சோதனை வெற்றி; ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

2வது அணு ஆயுத சோதனை வெற்றி; ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

7


ADDED : அக் 30, 2025 08:31 AM

Google News

7

ADDED : அக் 30, 2025 08:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் - இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார்.

இந்த சோதனை தேவையில்லாத ஒன்று அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது என அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். இது குறித்து அதிபர் புடின் கூறியதாவது:

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோன் 'போஸிடான் சூப்பர் டார்பிடோ' வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ட்ரோன் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை விட தாக்கும் திறன் கொண்டது.

பெரிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட போஸிடான் நீர்மூழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையை போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சோதனை முயற்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பதற்றத்தை அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us