sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சி படை; அதிபர் ஆசாத் தப்பியோட்டம்

/

சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சி படை; அதிபர் ஆசாத் தப்பியோட்டம்

சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சி படை; அதிபர் ஆசாத் தப்பியோட்டம்

சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சி படை; அதிபர் ஆசாத் தப்பியோட்டம்


ADDED : டிச 09, 2024 03:23 AM

Google News

ADDED : டிச 09, 2024 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டமாஸ்கஸ் : எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின. அதற்கு முன் அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத், 59, தப்பியோடினார்.

கடந்த 54 ஆண்டுகளாக இருந்த ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார்.

அவரது மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற ஆசாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். அவர் பதவியேற்றபோது, நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால்,

தொடர்ச்சி 16ம் பக்கம்

ஆட்சி அதிகாரத்துக்காக, தன்னை எதிர்ப்போரை கட்டுப்படுத்தி, முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் வைத்திருந்தார்.

கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன.

கடந்த, 14 ஆண்டுகளில் ஆசாத் நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகளால் உள்நாட்டு போரில் ஐந்து லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம், 2.3 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில், பாதிக்கும் மேற்பட்டோர், உள்நாட்டிலேயே புலம் பெயர நேர்ந்தது. இதைத் தவிர, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்தாலும், ஆசாத்தின் கட்டுப்பாடுகள் குறையவில்லை. இந்நிலையில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற பிரிவினைவாத அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி தீவிர தாக்குதலை துவங்கின.

அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.

இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து, தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றும் நோக்கத்தோடு, படைகள்

முன்னேறின. மிக வேகமாக இந்தப் படைகள் முன்னேறின.

எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், சிரியா ராணுவம், போலீசார், டமாஸ்கசில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, நேற்று காலையில், டமாஸ்கசை கைப்பற்றியதாக கிளர்ச்சிப் படைகள் அறிவித்தன. இதற்கிடையே, அதிபர் ஆசாத், விமானம் வாயிலாக தப்பிச் சென்றார். இதையடுத்து, நாட்டின் நிர்வாகம் தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக கிளர்ச்சிப் படைகள் தெரிவித்தன.

ஆனால் ஆசாத் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே, அவர் சென்ற விமானம், விபத்தில் சிக்கியதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அதிபர் மாளிகை சூறை


ஆசாத் குடும்பத்தின் கட்டுப்பாட்டில், 54 ஆண்டுகளாக இருந்த சிரியாவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக, கிளர்ச்சி படை செய்தி வெளியிட்டது. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.

நாட்டின் நிர்வாகம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு அனைத்து ஒத்துழைப்புகளும் அளிப்பதாக, சிரியா பிரதமர் முகம்மது காஜி ஜலாலி அறிவித்தார்.

இதற்கிடையே, ஆசாத் வெளியேறியது, நாட்டை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றிய தகவல் வெளியாகி, மக்கள் சாலைகளில் குவிந்து கொண்டாடினர். ஆசாத் மற்றும் அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத்தின் சிலைகள், போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளை அவர்கள் சேதப்படுத்தினர்.

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஒரு கும்பல், அங்கிருந்த ஆசாத் மற்றும் அவருடைய தந்தையின் படங்களை சேதப்படுத்தினர். அதிபர் மாளிகையை அவர்கள் சூறையாடினர். ராணுவ அமைச்சகத்துக்குள்ளும் நுழைந்த ஒரு கும்பல், அதை சூறையாடியது.

தற்போதைக்கு அதிபர் ஆசாத் வெளியேறியுள்ளார். கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் தலைநகர் உட்பட நாடு வந்துள்ளது. ஆனால், புதிய அரசு எவ்வாறு அமைக்கப்பட உள்ளது என்பது மிகப் பெரும் கேள்வியாக அமைந்துள்ளது.

எப்படி துவங்கியது?

பஷார் அல் ஆசாத், 2000ல் அதிபராக பதவியேற்றார். தந்தை வழியில் கடுமையான கட்டுப்பாடுகளை அவர் கடைப்பிடித்தார். ஆனாலும், 2011ல் துவங்கிய போராட்டமே, தற்போது அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.கடந்த, 2011ல், 'அரபு ஸ்பிரிங்' எனப்படும் அரபு நாடுகள் பலவற்றில், ஆட்சி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டங்கள் துவங்கின. சிரியாவிலும், டரா நகரில் இவ்வாறு போராட்டம் நடந்தது. அதைக் கட்டுப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்தினார் ஆசாத். இதையடுத்து, நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்தன. அதிபர் பதவியில் இருந்து அவர் வெளியேற வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமாயின. இதுவே உள்நாட்டு போர் துவங்குவதற்கு காரணமானது.



கிளர்ச்சி படை உருவானது எப்படி?

அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட அல் - குவைதா பயங்கரவாத அமைப்பில் இருந்து பிரிந்ததே எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹிர் அல்ஷாம் என்ற கிளர்ச்சிப் படை. இதுவே, அதிபர் ஆசாத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியது. அண்டை நாடான துருக்கியின் ஆதரவு பெற்ற, சிரியாவைச் சேர்ந்த சிரியன் தேசிய ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இது செயல்பட்டு வருகிறது.ஆசாத் நிர்வாகத்திடம் இருந்து நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தருவதே தங்களுடைய நோக்கம் என்று இந்த அமைப்பு கூறிவருகிறது. அல் - குவைதா பின்னணி பிம்பத்தை உடைப்பதற்கான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்பு ஈடுபட்டு வந்துள்ளது. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் இந்த அமைப்பு கூறுகிறது. இதற்காக சிரியாவில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சில நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வந்தது.இந்த கிளர்ச்சிப் படையின் தலைவர் அபு முகம்மது அல் கோலானி, அல் - குவைதாவில் இருந்து பிரிந்தவர். கடந்த, 2016ல் எச்.டி.எஸ்., அமைப்பை உருவாக்கினார். முன்பு நுஸ்ரா முன்னணி என்றழைக்கப்பட்ட இந்தப் படை, ஆசாத் நிர்வாகத்துக்கு எதிராக போராடி வந்துள்ளது.



டாக்டர் டூ அதிபர்

சிரியாவில் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் பஷார் அல் ஆசாத். இவர், 1965 செப்., 11ல் டமாஸ்கசில் பிறந்தார். இவரது தந்தை ஹபீஸ் அல் ஆசாத், ராணுவ அதிகாரி. 1971ல் இருந்து 2000ல் மறையும் வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். அவரது மறைவுக்குப்பின் மகன் பஷார் அல் ஆசாத், அதிபராக பதவியேற்றார். எம்.பி.பி.எஸ்., முடித்த இவர், நான்காண்டு அந்நாட்டு ராணுவத்தில் டாக்டராக பணியாற்றினார். 1992ல் கண் மருத்துவ மேற்படிப்புக்கு லண்டன் சென்றார். சிரியா ஆக்கிரமிப்பு லெபனான் பகுதியில் 1998ல் ராணுவ அதிகாரியாக இருந்த இவரது மூத்த சகோதரர் கார் விபத்தில் பலியானதால், அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 2000ல் தந்தை மறைந்ததும் அதிபராக பொறுப்பேற்றார். ஒரே குடும்பமே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகத்தை வலியுறுத்தியும், இவரை பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. பல குழுக்கள் களமிறங்கின. இவற்றை ஒடுக்கும் நடவடிக்கையில் அதிபர் இறங்கினார். 2011ல் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், அரபு நாடுகள் இவரை பதவி விலக வலியுறுத்தின. அந்த நேரத்தில் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யா களமிறஙகியது. இது சிரிய உள்நாட்டுப்போருக்கு வித்திட்டது. சிரியாவில் சன்னி பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால் ஷியா பிரிவை சேர்ந்தவர் ஆசாத். இதனால் சன்னி பிரிவுக்கு ஆதரவாக ஐ.எஸ்., அமைப்பும் அதிபரை எதிர்க்க துவங்கியது.



மக்கள் கொண்டாட்டாம்

நாட்டை விட்டு அதிபர் பஷர் அல் - ஆசாத் தப்பியோடியதை அறிந்த பொது மக்கள், தலைநகர் டமாஸ்கஸ் நகரின் மத்திய சதுக்கங்களில் திரளாக கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அசாத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், காரின் ஹாரன்களை ஒலிக்கச் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருசில இடங்களில், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



பதுங்கியது எங்கே?

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சிரியா அதிபர் பஷர் அல் - ஆசாத் தப்பியோடியதாக தகவல் வெளியானது. அந்நாட்டின் துபாய் நகரில், அவரது குடும்பம் சொத்துக்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பஷர் அல் - ஆசாத் வந்துள்ளதாக வெளியான தகவலை அந்நாட்டின் மூத்த துாதரக அதிகாரி அன்வர் கர்காஷ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.








      Dinamalar
      Follow us