sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கொசுவைப் பிடித்தால் சன்மானம்: பிலிப்பைன்ஸில் வினோத அறிவிப்பு

/

கொசுவைப் பிடித்தால் சன்மானம்: பிலிப்பைன்ஸில் வினோத அறிவிப்பு

கொசுவைப் பிடித்தால் சன்மானம்: பிலிப்பைன்ஸில் வினோத அறிவிப்பு

கொசுவைப் பிடித்தால் சன்மானம்: பிலிப்பைன்ஸில் வினோத அறிவிப்பு

6


ADDED : பிப் 20, 2025 11:05 AM

Google News

ADDED : பிப் 20, 2025 11:05 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. தலைநகர் மத்திய மணிலாவில் வசிக்கும் மக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 'பொதுமக்கள் வீட்டில் அதிக தண்ணீரை தேக்கி வைத்து கொசுவை உற்பத்தி செய்வார்கள். இதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்குமே தவிர எந்த பலனும் இல்லை' என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிருள்ள கொசுக்கள் புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டு வருகிறது. 'இதுவரை மொத்தம் 21 பேர் வெகுமதியைப் பெற்றுள்ளனர். 700 கொசுக்களை மக்கள் கொண்டு வந்துள்ளனர்' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெங்குவை எதிர்த்துப் போராடுவதில் உள்ளூர் அரசாங்க நிர்வாகிகளின் நல்ல நோக்கங்களைப் பாராட்டுகிறோம்' என்று பிலிப்பைன்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் டெங்கு பரப்பும் கொசுக்கள் முட்டையிடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பது போன்ற தற்போதைய நடவடிக்கைகளை தீவிர படுத்த, இந்த பரிசுத் தொகை வழங்கப்படுவதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us