sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

முடிவெடுக்கும் மையங்களை தாக்குவோம்: உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

/

முடிவெடுக்கும் மையங்களை தாக்குவோம்: உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

முடிவெடுக்கும் மையங்களை தாக்குவோம்: உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

முடிவெடுக்கும் மையங்களை தாக்குவோம்: உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

7


UPDATED : நவ 29, 2024 07:42 AM

ADDED : நவ 29, 2024 03:04 AM

Google News

UPDATED : நவ 29, 2024 07:42 AM ADDED : நவ 29, 2024 03:04 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: ''அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவும், உக்ரைனின் முடிவெடுக்கும் மையங்கள் குறிவைத்து தாக்கப்படும்,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் மீது, உக்ரைன் படைகள் மிகப்பெரிய, 'ட்ரோன்' தாக்குதல்களை சமீபத்தில் நடத்தின. இந்நிலையில், ஆஸ்தானா என்ற இடத்தில் நடந்த ராணுவம் தொடர்பான மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புடின் பேசியதாவது:

நேட்டோ நாடுகள் ஒட்டுமொத்தமாக தயாரிக்கும் ஏவுகணையின் எண்ணிக்கையை விட, 10 மடங்கு அதிக அளவிலான ஏவுகணைகளை ரஷ்யா தயாரிக்கிறது. தேவையில்லாமல் எங்களிடம் வாலாட்டினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை உக்ரைன் எங்கள் மீது ஏவினால், 'ஓரேஷ்னிக்' ஏவுகணையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இதை, உலகின் வேறு எந்த நாட்டின் ஏவுகணையுடனும் ஒப்பிட முடியாது. இது போன்ற ஏவுகணையை மேற்கத்திய நாடுகள் தயாரிப்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லாதது.

எங்கள் மீது தாக்குதலை தொடர்ந்தால், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள, போர் தொடர்பான முடிவுகளை எடுக்கும் மையங்களை குறிவைத்து ஓரேஷ்னிக் ஏவுகணைகளை ஏவுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஓரேஷ்னிக் ஏவுகணை, அணு ஆயுதத்துக்கு நிகரானதாக கூறப்படுகிறது. இதை தான், உக்ரைனின் நிப்ரோவில் சோதனை முறையில் ரஷ்யா சமீபத்தில் ஏவியதாக கூறப்படுகிறது. இது, 5,500 கி.மீ., வரை சென்று தாக்கும் திறன் உடையது.






      Dinamalar
      Follow us