sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சஞ்சு சாம்சன், திலக் வர்மா அதிரடி: இந்தியா 283 ரன்கள் குவிப்பு

/

சஞ்சு சாம்சன், திலக் வர்மா அதிரடி: இந்தியா 283 ரன்கள் குவிப்பு

சஞ்சு சாம்சன், திலக் வர்மா அதிரடி: இந்தியா 283 ரன்கள் குவிப்பு

சஞ்சு சாம்சன், திலக் வர்மா அதிரடி: இந்தியா 283 ரன்கள் குவிப்பு


ADDED : நவ 15, 2024 10:32 PM

Google News

ADDED : நவ 15, 2024 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4வது டி-20 தொடரில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.இதனால், இந்திய அணி 283 ரன்கள் குவித்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. தற்போது இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரராக சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். 18 பந்துகளில் 36 ரன் எடுத்து அபிஷேக் அவுட்டானார். பிறகு சஞ்சு சாம்சனுடன் திலக் வர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் மாறி மாறி சிக்சர், போர் என அடிக்க இந்தியாவின் ரன் ரேட் அதிகரிக்க துவங்கியது. இதனால், இந்திய அணி 15 ஓவர்களில் 200 ரன்களை தாண்டியது.

சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்து சதம் அடித்தனர். இந்த போட்டியில் 41 பந்துகளில் திலக் சர்மா சதம் அடித்தார். டி 20 போட்டியில் சஞ்சு சாம்சன் 3வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அடுத்தடுத்து சதம் அடித்த இந்திய வீரர்கள் என்ற பெருமையும் இருவருக்கும் கிடைத்தது. இந்த ஜோடி 210 ரன்கள் சேர்த்தது.

இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 120, சஞ்சு சாம்சன் 109 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.






      Dinamalar
      Follow us