sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தெரியாமல் நடந்ததாக இலங்கை விளக்கம்

/

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தெரியாமல் நடந்ததாக இலங்கை விளக்கம்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தெரியாமல் நடந்ததாக இலங்கை விளக்கம்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தெரியாமல் நடந்ததாக இலங்கை விளக்கம்


ADDED : ஜன 30, 2025 01:13 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஐந்து பேர் காயமடைந்தனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், துப்பாக்கிச் சூடு தெரியாமல் நடந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால், தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மீனவர்கள், கடந்த 27ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே வல்வெட்டித்துறை கடற்பகுதி அருகே அவர்கள் சென்றபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், இருவர் பலத்த காயமடைந்தனர்; மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, நம் நாட்டு மீனவர்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை வரும் 10ம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. துப்பாக்கிச்சூடு குறித்து டில்லியில் உள்ள இலங்கை துாதரை அழைத்து, நம் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இலங்கையில் உள்ள நம் துாதரக அதிகாரிகளும், அந்நாட்டு அரசிடம் இதுகுறித்து முறையிட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்கள் ஐந்து பேரையும், அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர். இதையடுத்து, துப்பாக்கிச் சூடு தெரியாமல் நடந்ததாக இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது.

இது குறித்து கடற்படை துணை அட்மிரல் காஞ்சனா பனகோடா நேற்று கூறுகையில், “கைது சம்பவத்தின்போது இலங்கை கடற்படையினரின் உத்தரவுகளை மீறி இந்திய மீனவர்கள் செயல்பட்டனர். எச்சரிக்கையையும் மீறி, மீன்பிடி படகை அவர்கள் வேகமாக செலுத்தியுள்ளனர்.

“அவர்கள் படகுக்கு சென்ற இலங்கை கடற்படையினரை தாக்கவும், ஆயுதங்களை பறிக்கவும் இந்திய மீனவர்கள் முயன்றனர். அப்போது நடந்த மோதலில், எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வெளியேறி, ஐந்து பேர் காயமடைந்தனர். இது தவறுதலாக நடந்த சம்பவம்,” என்றார்.






      Dinamalar
      Follow us