sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அதிபரான பின் முதல் வெளிநாட்டுப்பயணம்; இந்தியா வருகிறார் அனுர திசநாயகே

/

அதிபரான பின் முதல் வெளிநாட்டுப்பயணம்; இந்தியா வருகிறார் அனுர திசநாயகே

அதிபரான பின் முதல் வெளிநாட்டுப்பயணம்; இந்தியா வருகிறார் அனுர திசநாயகே

அதிபரான பின் முதல் வெளிநாட்டுப்பயணம்; இந்தியா வருகிறார் அனுர திசநாயகே

6


ADDED : டிச 11, 2024 07:43 AM

Google News

ADDED : டிச 11, 2024 07:43 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு; இலங்கை அதிபரான பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக அனுரகுமார திசநாயகே இந்தியா வருகிறார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுர குமார திசநாயகே பெரும் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் அவரது கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், அனுர குமார திசநாயகே, 2 நாள் அரசு முறை பயணமாக டிச.15ம் தேதி இந்தியா வருகிறார். இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிசா நிருபர்களிடம் கூறியதாவது;

வரும் 15ம் தேதி, அதிபர் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா செல்கிறார். பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தின் போது அதிபருடன், வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், இணையமைச்சர் விஜில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இணைகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us