sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆப்கனில் பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை

/

ஆப்கனில் பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை

ஆப்கனில் பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை

ஆப்கனில் பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை


ADDED : டிச 31, 2024 02:17 AM

Google News

ADDED : டிச 31, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காபூல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் புழங்கும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் உள்ள தலிபான்கள், பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்றவை அங்கு மறுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஆப்கனில் பெண்கள் அதிகம் புழங்கும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தலிபான்கள் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:

பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதை பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழிவகுக்கும். அதனால், புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டாரின் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது.

ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பியோ அல்லது அதை பார்க்க முடியாத வகையிலோ தடை செய்ய வேண்டும். இதை, வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் வாயிலாக அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படும் என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா நிறுவனங்களில் சமீப காலமாக பெண்கள் அதிகளவில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். அவ்வாறு பணிபுரியும் பெண்கள் முறையாக 'ஹிஜாப்' அணியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இனி, எந்த அரசு சாரா நிறுவனத்திலும் பெண் பணியாளர்கள் இருக்கக்கூடாது. அவ்வாறு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us