வரிவிதிப்பு விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அதிபர் டிரம்ப் மேல்முறையீடு
வரிவிதிப்பு விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அதிபர் டிரம்ப் மேல்முறையீடு
UPDATED : செப் 04, 2025 04:32 PM
ADDED : செப் 04, 2025 04:31 PM

வாஷிங்டன்: வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் அதிபர் டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார்.
அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, சர்வதேச நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் தன் இஷ்டப்படி கூடுதல் வரி விதித்தது சட்டவிரோதமானது' என, அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து அதிபர் டிரம்ப் தரப்பில் அமெரிக்க அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசர நிலையை சமாளிக்கவே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.