sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

/

பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

6


ADDED : ஏப் 19, 2025 12:59 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:59 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: பஞ்சாபில், 14 பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் என்ற ஹேப்பி பாசியா, அமெரிக்காவில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாபின் அமிர்தசரசை சேர்ந்தவர் ஹர்ப்ரீத் சிங். பயங்கரவாதியான இவர், கடந்த ஜனவரியில் அமிர்தசரஸில் உள்ள கும்தாலா போலீஸ் ஸ்டேஷன் அருகே, மூத்த அதிகாரியின் வாகனத்தை குண்டு வைத்து தகர்த்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றிருந்தார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இவர் மீது பஞ்சாபில், 14 பயங்கரவாத தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடித்து கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.

இந்தியாவில் தீவிரமாக தேடப்படும் பயங்கரவாதியான இவருக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடனும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சா இன்டர்நேஷனல் உடனும் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஞ்சாபில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய இவர், பஞ்சாப் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேக்ரமென்டோ நகரில் ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us