sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 மதுக்கூடங்களுக்கான நேர கட்டுப்பாடு தடையை விலக்கியது தாய்லாந்து அரசு

/

 மதுக்கூடங்களுக்கான நேர கட்டுப்பாடு தடையை விலக்கியது தாய்லாந்து அரசு

 மதுக்கூடங்களுக்கான நேர கட்டுப்பாடு தடையை விலக்கியது தாய்லாந்து அரசு

 மதுக்கூடங்களுக்கான நேர கட்டுப்பாடு தடையை விலக்கியது தாய்லாந்து அரசு


ADDED : நவ 15, 2025 12:37 AM

Google News

ADDED : நவ 15, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: சு ற்றுலாத்துறையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடையை அந்நாட்டு அரசு விலக்கி உள்ளது.

தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில், தற்போது மதுபான விற்பனைக்கு இரண்டு கட்டமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே மதுபான கூடங்கள் திறக்கப்பட வேண்டும். அதன்பின், மாலை 5:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

மதியம், 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மதுக்கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. விதியை மீறுவோருக்கு, 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

சுற்றுலா துறை வருவாயை பெரிதும் நம்பியுள்ள தாய்லா ந்தில், இந்த நேரக் கட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், சுற்றுலா துறையினர் அரசுக்கு அழுத்தம் தர துவங்கினர்.

இதையடுத்து, மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலான தடையை விலக்கிக்கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதை தொடர்ந்து, தாய்லாந்து முழுதும் காலை 11:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, தொடர்ச்சியாக மதுக்கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த தடை விலக்கு, ஆறு மாத சோதனை திட்டமாக அமல்படுத்தப்படும்; இது, அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us