sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கடுமையான பின்விளைவு ஏற்படும்: நாடு கடத்தும் படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

/

கடுமையான பின்விளைவு ஏற்படும்: நாடு கடத்தும் படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

கடுமையான பின்விளைவு ஏற்படும்: நாடு கடத்தும் படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

கடுமையான பின்விளைவு ஏற்படும்: நாடு கடத்தும் படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

12


UPDATED : ஜன 24, 2025 10:13 PM

ADDED : ஜன 24, 2025 10:04 PM

Google News

UPDATED : ஜன 24, 2025 10:13 PM ADDED : ஜன 24, 2025 10:04 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி துவங்கியது. இதுகுறித்த புகைப்படத்தை அந்நாடு வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுத்து நிறுத்துவோம். குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்து இருந்தார். இதன்படி அதிபராக அவர் பதவியேற்றதும்,'சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது என அறிவித்தார். மெக்சிகோ எல்லையில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியை அதிகாரிகள் துவக்கினர். இதன்படி சட்டவிரோதமாக குடியேறிய 538 பேரை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் சிலர் பயங்கரவாதிகள், பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Image 1372974இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தும் பணி துவங்கியது. சட்டவிரோதமாக குடியேறியதாக கைது செய்யப்பட்டவர்கள் விமானத்தில் ஏற்றும் புகைப்படங்களை வெள்ளை மாளிகை அதிகாரி கரோலின் லெவியாட் சமூக வலைதளப்பதிவில் வெளியிட்டு கூறியுள்ளதாவது: நாடு கடத்தும் விமானங்கள் கிளம்பின. ஒட்டு மொத்த உலகிற்கும் வலிமையான ஒரு செய்தியை அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவினால், நீங்கள் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்வீர்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us