sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பெண்களுக்கான விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை:அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு

/

பெண்களுக்கான விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை:அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு

பெண்களுக்கான விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை:அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு

பெண்களுக்கான விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை:அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு


ADDED : பிப் 07, 2025 12:48 AM

Google News

ADDED : பிப் 07, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுகளில், மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்பதற்கு தடை விதிக்கும் உத்தரவை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தினமும் புது புது அறிவிப்புகளை, உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில், மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நுாற்றுக்கணக்கான விளையாட்டு வீராங்கனையர் முன்னிலையில், இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். “விளையாட்டில் பெண்களுக்கு எதிரான போரை நிறுத்தியுள்ளேன்,” என, அப்போது அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் தேசிய கல்லுாரி விளையாட்டு சங்கத்தின் புள்ளி விபரங்களின்படி, 1,100 விளையாட்டு பள்ளிகளில் 5.30 லட்சம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.

இதில், 10 பேர் மட்டுமே மூன்றாம் பாலினத்தவர். அதிபரின் புதிய உத்தரவுக்கு இந்த சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போதே, இந்த வாக்குறுதியை டிரம்ப் அளித்திருந்தார். மூன்றாம் பாலினத்தவர், பெண்கள் பிரிவில் பங்கேற்பதற்கு, 25 மாகாணங்களில் ஏற்கனவே தடை சட்டம் அமலில் உள்ளது.

மக்கள் போராட்டம்

அமெரிக்க அதிபராக பதவியேற்று மூன்று வாரங்கள் முடிந்துள்ள நிலையில், டொனால்டு டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குடியுரிமை தொடர்பான உத்தரவுகள், மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான உத்தரவுகள், மேற்காசியாவின் காசா பகுதியை கையகப்படுத்துவது உள்ளிட்ட அவரது உத்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் நேற்று போராட்டங்கள் நடந்தன.குறிப்பாக, தொழிலதிபர் எலான் மஸ்க், சிறந்த அரசு நிர்வாகத்துக்கான துறையின் தலைவராக நியமிக்கப்பட்டது, அரசு நிர்வாகத்தில் அவரது தலையீடு ஆகியவற்றை எதிர்த்து இந்தப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரே நாளில் போராட்டம் என்ற பெயரில், 50 மாகாணங்களில், 50 இடங்களில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, பல முக்கிய நகரங்களில் மக்கள் கூடி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.








      Dinamalar
      Follow us