sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; 34 பேர் பலி; மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்!

/

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; 34 பேர் பலி; மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்!

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; 34 பேர் பலி; மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்!

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; 34 பேர் பலி; மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்!

2


ADDED : ஜூலை 19, 2025 10:17 PM

Google News

2

ADDED : ஜூலை 19, 2025 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹானோய்: வியட்நாமின் ஹா லாங் விரிகுடாவில் ஒரு சுற்றுலாப் படகு திடீரென ஏற்பட்ட புயலால் கவிழ்ந்ததில், 34 பேர் உயிரிழந்தனர். மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

ஆசிய நாடான வியட்நாமின், தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் இன்று மதியம் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றனர். ஹா லாங் கடலோர பகுதியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், கடலில் தத்தளித்த 11 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில், 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us