sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கமலா ஹாரிஸ் பேட்டியை வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் நெருக்கடி

/

கமலா ஹாரிஸ் பேட்டியை வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் நெருக்கடி

கமலா ஹாரிஸ் பேட்டியை வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் நெருக்கடி

கமலா ஹாரிஸ் பேட்டியை வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் நெருக்கடி


ADDED : பிப் 09, 2025 10:29 PM

Google News

ADDED : பிப் 09, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் கமலா ஹாரிஸின் பேட்டியை திரித்து வெளியிட்டதாக பிரபல செய்தி நிறுவனத்திற்கு எதிராக டிரம்ப் வழக்கு போட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் டிரம்ப்பும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனிடையே, தேர்தலுக்கு முன்பு கமலா ஹாரிஸ் கொடுத்த இன்டர்வ்யூவை மட்டுமே சி.பி.எஸ்., எனும் செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு, அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு மணிநேரம் எடுக்கப்பட்ட இன்டர்வ்யூவில் வெறும் 20 நிமிடங்களை மட்டும் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாக வெளியிட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, உண்மையை திரித்து கூறும் வகையில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளதால், சி.பி.எஸ்.,யின் தாய் நிறுவனமான பாராமவுன்ட் குளோபலுக்கு எதிராக 10 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்ட சி.பி.எஸ்., செய்தி நிறுவனத்தை முடக்க வேண்டும் அல்லது சுமார் 60 நிமிடங்கள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us