sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள்; போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியால் அதிபர் டிரம்ப் ஆவேசம்!

/

ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள்; போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியால் அதிபர் டிரம்ப் ஆவேசம்!

ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள்; போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியால் அதிபர் டிரம்ப் ஆவேசம்!

ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள்; போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியால் அதிபர் டிரம்ப் ஆவேசம்!

8


ADDED : ஜூலை 26, 2025 07:20 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 07:20 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ''ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள். அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் காட்டவில்லை'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரம் காட்டினார்.

அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்தது. இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது:

ஹமாஸ் போராளிக் குழுவிற்கு அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் இல்லை. ஹமாஸ் உண்மையில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை. அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இது மிக மிக மோசமானது. நீங்கள் வேலையை முடிக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு அது சென்றிருக்க வேண்டும்.

அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவித்த பிறகு என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தங்களை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஹமாஸ் குழுவின் தலைவர்கள் இப்போது வேட்டையாடப்படுவார்கள். இஸ்ரேல் போராடி தனது வேலையை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us