sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எத்தனால் இறக்குமதிக்கு தடை: இந்தியா மீது அமெரிக்கா புகார்

/

எத்தனால் இறக்குமதிக்கு தடை: இந்தியா மீது அமெரிக்கா புகார்

எத்தனால் இறக்குமதிக்கு தடை: இந்தியா மீது அமெரிக்கா புகார்

எத்தனால் இறக்குமதிக்கு தடை: இந்தியா மீது அமெரிக்கா புகார்

4


ADDED : ஏப் 09, 2025 06:40 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 06:40 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: எத்தனாலை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்திருப்பதால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக, அந்நாட்டு வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு, 2025ம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முக்கிய வர்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவை நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், இவை அமெரிக்காவின் வர்த்தகத்தை சிதைப்பதுடன், அமெரிக்க உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதில் குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எரிபொருளுடன் எத்தனால் கலப்பை அடைய இலக்கு நிர்ணயித்துள்ள போதும், எரிபொருள் பயன்பாடுக்கான எத்தனால் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. தாய்லாந்தும் இதே போன்ற காரணங்களுக்காக, கடந்த 2005 முதல் இறக்குமதி உரிமத்துக்கு அனுமதி அளிப்பதில்லை.

இந்தியா மற்றும் தாய்லாந்து சந்தைகள் அமெரிக்க எத்தனாலை அனுமதித்தால், ஆண்டுக்கு 3,519 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us