இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் நம்பிக்கை
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் நம்பிக்கை
ADDED : அக் 30, 2025 01:22 AM

சியோல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தென்கொரியாவில் பேசியபோது, இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறினார்.
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு பண உதவி செய்கிறது என்ற காரணங்களை கூறி, இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 50 சதவீத வரி விதித்தார்.
இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதனால் அமெரிக்கா நம் நாட்டுக்கான வரியை 50 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக ஆக குறைக்க ஒப்புக்கொண்டது என கூறப்படுகிறது.
ஆனால் இரு தரப்பும் பரஸ்பர ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், அமெரி க்க அதிபர் டிரம்ப் தன் ஆ சிய பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று தென் கொரியாவுக்கு சென்றார். அங்கு ஆசியா - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் நீண்ட உரை நிகழ்த்தினார்.
அதில், “நான் இந் தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் மதிக்கிறேன்; நேசிக்கிறேன். எங்கள் இடையே சிறந்த உறவு உள்ளது.
' 'அவர் பார்ப்பதற்கு மென்மையானவர். ஆனால் மிகவும் கடினமான, வலுவான தலைவர்,” என்றார்.

