sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அணுஆயுத ஒப்பந்த முன்மொழிவுகளை ஈரானுக்கு அனுப்பியது அமெரிக்கா

/

அணுஆயுத ஒப்பந்த முன்மொழிவுகளை ஈரானுக்கு அனுப்பியது அமெரிக்கா

அணுஆயுத ஒப்பந்த முன்மொழிவுகளை ஈரானுக்கு அனுப்பியது அமெரிக்கா

அணுஆயுத ஒப்பந்த முன்மொழிவுகளை ஈரானுக்கு அனுப்பியது அமெரிக்கா


ADDED : ஜூன் 01, 2025 10:05 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அணுஆயுத ஒப்பந்த முன்மொழிவுகளை அமெரிக்க அரசு நிர்வாகம், ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஈரான் அணுஆயுத திட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்பது அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

பிறகு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதன் பிறகு அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், ஈரான் தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஈரான் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, அணுஆயுத தயாரிப்புக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஈரானுக்கு அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார்.

இந்த சூழலில், ஓமன் தலைமையில் இருநாடுகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, யுரேனியம் மேம்பாட்டை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கான முன்மொழிவை அனுப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட் கூறியதாவது; இந்த ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நல்லது. ஈரான் ஒருபோதும் அணு குண்டு பெற முடியாது என்பதை அதிபர் டிரம்ப் தெளிவாக கூறிவிட்டார். அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மூலம் ஈரானுக்கு விரிவான மற்றும் ஏற்கத்தக்க முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'அணுஆயுத ஒப்பந்தம் குறித்த அமெரிக்க முன்மொழிவுக்கு ஈரான் மக்களின் கொள்கைகள், நாட்டின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு ஏற்ப பொருத்தமான பதில் அளிக்கப்படும்', எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us