sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

/

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

3


ADDED : ஜூன் 23, 2025 09:31 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 09:31 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என டிரம்ப் நினைக்கிறார். ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டி: ஈரானின் முரட்டுத்தனமான, தீவிரமான அணுசக்தி நிலையங்களை அழிக்க அதிபர் டிரம்ப் துணிச்சலான நடவடிக்கை எடுத்தார். கடந்த கால அதிபர்கள் இந்த நடவடிக்கையை எடுக்க விரும்பினர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எந்த அதிபருக்கும் அதைச் செய்ய தைரியம் இல்லை. அதிபர் டிரம்ப் தைரியமாக செய்தார். அமெரிக்கா இன்று மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என டிரம்ப் நினைக்கிறார். ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளார்.

அணு ஆயுதங்களை உருவாக்கும் ஈரானின் திறனை அமெரிக்கா பறித்தது. ஈரான் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. அணு ஆயுதத்தை உருவாக்கி உலகை அச்சுறுத்தும் திறன் அவர்களிடம் இனி இல்லை. ஈரான் மக்கள் ஏன் பல ஆண்டுகளாக தங்களை அடக்கி வரும் இந்த நம்பமுடியாத வன்முறை ஆட்சியின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது? இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us