
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துவாரகாவில் சாஸ்தாப்ரீதி
புதுடில்லி: துவாரகாவில் உள்ள ஸ்ரீராம் மந்திரில், மண்டல பூஜையை ஒட்டி, டிச-7 அன்று சாஸ்தாப்ரீதி நடைபெற்றது. காலை ஸ்ரீ ஐயப்பன் விக்ரஹத்திற்கு அபிஷேகம், பிறகு சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, டில்லி சுனில் பாகவதர் தலைமையில் பாலகோகுலம் குழுவினரின் பஜனை நடைபெற்றது. பக்தர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
