sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாகம்

/

ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாகம்

ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாகம்

ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாகம்


ஆக 06, 2024

ஆக 06, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : ஆடி மாதத்தை ஒட்டி, கேசவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவிலில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த ஸ்ரீமத் பாகவத சப்தாகம் ஆகஸ்ட் 5ம் தேதி நிறைவுற்றது. ஸ்ரீ சியாம் சுந்தர் பராசர் சாஸ்திரி இதில் பங்கேற்று உற்சாகமாக பாகவத உபன்யாசம் வழங்கினார். பாகவத சப்தஹம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் உள்ளடக்கங்களை நன்கு கற்றறிந்த அறிஞரால் ஒரு திட்டவட்டமான கால அட்டவணையுடன் ஏழு நாட்களுக்கு விளக்குவது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் கோயிலில் இது நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். . நிகழ்ச்சியை ஆஸ்திக சமாஜம் ஏற்பாடு செய்திருந்தது.


சமாஜம் கடந்த பல வருடங்களாக கேசவபுரத்தில் உள்ள சில அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மற்றும் திறமையான மாணவ, மாணவியர்களை, பள்ளி முதல்வர் மூலம் தேர்வு செய்து அவர்களை ஊக்குவித்தும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த வருடம், நிகழ்ச்சி நிறைவு நாளன்று, 54 மாணவ, மாணவியருக்கு தலா 3000 ருபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஸ்ரீ சியாம் சுந்தர் பராசர் சாஸ்திரி இதை வழங்கினார்.


ஆஸ்திக சமாஜம் தலைவர் டி. என். சிவராமகிருஷ்ணன் பேசுகையில், வரும் வருடங்களில் 100 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us