வேத கோஷம் அறக்கட்டளையின் சிறப்பு சமஷ்டி சந்தியாவந்தனம்
வேத கோஷம் அறக்கட்டளையின் சிறப்பு சமஷ்டி சந்தியாவந்தனம்
ஜூலை 13, 2026

வேத கோஷம் அறக்கட்டளையின் சிறப்பு சமஷ்டி சந்தியாவந்தனம்
வேத கோஷம் அறக்கட்டளை சார்பில், பொதுமக்களின் ஆன்மீக முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கோயில்களில் 'சமஷ்டி சந்தியாவந்தனம்' (கூட்டாகச் செய்யும் சந்தியாவந்தனம்) ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜூலை 11 மாலை 5.30 மணிக்கு மயூர் விகார், ஸ்ரீ காருண்ய மகா கணபதி ஆலயத்தில் நடைபெற்ற சமஷ்டி சந்தியாவந்தனம் மிகச்சிறப்பாகவும், உணர்வு பூர்வமாகவும் நடைபெற்றது.
சந்தியாவந்தனத்தின் மகிமைநமது சாஸ்திரங்களின்படி, சந்தியாவந்தனம் செய்யும் இடத்தைப் பொறுத்து அதன் புண்ணிய பலன்கள் மாறுபடுகின்றன. அதன் முக்கியத்துவத்தை கீழே காணலாம்.
இடம் :
வீடு : புண்ணிய பலன் : 1 மடங்குகோசாலை : 10 மடங்குநதிக்கரை100 முதல் 1,000 மடங்குஆலயம் (கோவில்) அளவிடற்கரிய பலன் (அனந்த கோடி)
பங்களிப்பு
தினசரி சந்தியாவந்தனம் செய்யும் அன்பர்கள், இனிவரும் காலங்களில் கோயில்களில் நடைபெறும் இந்த உன்னதமான கூட்டு வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இறையருளையும், சாஸ்திர ரீதியான பலன்களையும் பெறுமாறு வேத கோஷம் அறக்கட்டளை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
ஸர்வே ஜனாஃ ஸுகினோ பவந்து ????????(அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க)
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
