sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்

/

திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்

திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்

திருமலை திருப்பதியில் கானஸ்ம்ருதி மண்டலி நாம சங்கீர்த்தனம்


ஆக 24, 2024

ஆக 24, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) SVBC சேனலுடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை உலக அரங்கில் ஊக்குவிக்க நேர்மையாக செயல்பட்டு வருகிறது. நாமசங்கீதனம், நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், இந்திய கலாச்சாரத்துடன் தொடர்புடைய பிற நிகழ்வுகளில் பிரவசனம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 22, சென்னையைச் சேர்ந்த கானஸ்ம்ருதி பஜனை மண்டலிக்கு தெய்வீக மேடையில் நாமசங்கீர்த்தனம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. சனாதன தர்மம் மற்றும் மூன்று நம்பிக்கை முறைகளை (அத்வைதம் - ஸ்ரீ ஆதி சங்கரர், த்வைதம் - ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் மற்றும் விசிஷ்டா த்வைதம் - ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்) பரப்புவதில் முக்கிய பங்காற்றிய மூன்று குருமார்களை உள்ளடக்கிய நிகழ்ச்சியை கானஸ்ம்ருதி பஜன் மண்டலி தொடங்கியது.


ஆகஸ்ட் 21, ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகளின் ஆராதனை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், வெங்கட்ரமணர், லக்ஷ்மி தேவி ஆகியோரின் பாடல்களையும் பாடினர். ஆஞ்சநேயர் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. எஸ்.வி.பி.சி.யால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் இசை ஆவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்










      Dinamalar
      Follow us