வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தலைநகர் புதுடில்லியில் உள்ள கடமைப் பாதையில் நேற்று நடந்த அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற மஹாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி.
கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழியில்லாத நிலையில், மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் வேதனையுடன் காத்திருக்கும் பயணிகள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் தேரோட்டத்தில் விநாயகர் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாள் காலை உற்சவத்தில் 63 நாயன்மார்கள் விமானங்களை அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் பள்ளி மாணவர்கள் தோழில் சுமந்தபடி மாட வீதி உலா வந்தனர்.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலை பண்பாட்டுதுறை சார்பில் உலகளாவிய கலாச்சாரம் அன்பு அமைதி நல்லிணக்கம் என்ற திட்டத்தினை இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலைப் பண்பாட்டு துறை தலைவர் சந்திரிகா தீதீஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்