எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட கூழைக்கிடா பறவைகளை, பறவை ஆர்வலர்கள் வனத்துறையினருடன் இணைந்து கிண்டியில் உள்ள வன உயிரின சிகிச்சை மையத்தில் வைத்து சுத்தம் செய்கின்றனர்.இடம் : கிண்டி.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.