விழுப்புரம் புதுச்சேரி ரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுங்க சாவடி அருகே இரண்டு பக்கமும் யூடர்ன் வளைவு இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சகட்டுமேனிக்கு குறுக்கே ரோட்டை கடப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.