தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- வினா போட்டி பொள்ளாச்சி அருகே ஆனைமலை அன்னை மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில், பரிசு பெற்ற மாணவர்களுடன் பள்ளி முதல்வர் முத்துலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர்.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்
கோவை, தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் உள்ள ஓய்.எம்.சி.ஏ., வில் 6 முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சம்மர் கேம்ப் தொடங்கியது. இதில் கூடை பந்து விளையாட்டிற்கு பயிற்சிபெற்ற சிறுவர்கள்.