மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரண்டாவது நாளாக பம்மல் பகுதியில் நடந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் விதமாக மனுக்கள் பெறப்பட்டன. இடம் : பம்மல் .
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.