கோவை குறிச்சி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட உலகத்திலேயே முதன்முறையாக தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையினை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.