ஜம்மு-காஷ்மீரில், கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இளைஞர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போதைப்பொருட்களுக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.
நம் அண்டை நாடான சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான புஜியன்
அந்நாட்டின் கடற்படையில் இணைக்கும் விழா, தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில்
உள்ள சன்யா நகரின் கடற்படை துறையில் நடந்தது. இது சீனா உள்நாட்டிலேயே
வடிவமைத்த முதல் கப்பல்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பாஜ மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரபாவதி தலைமையில் கோவையில் பெண் பாலியல் பலாத்காரம் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது..
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
புதுச்சேரியில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு மூலம் கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.