மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்டு, இறக்க இடமில்லாததால், திருப்பூர் தென்னம்பாளையம் மார்கெட் வெளியே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெரிய வெங்காயம் ஏற்றி வந்த லாரிகள்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.