கோவை ஆர்.எஸ்., புரம் சத்குரு சேவாஸ்ரமத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் சீர்காழி மாரியம்மன் கலைக் குழுவினரின் ராம காதை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.