தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர் அங்கிருந்து சென்னை நகருக்குள் செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து பஸ் ஏறுகின்றனர்
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது
பாடி குப்பம் சாலை - கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.