கோவை அரசு மருத்துவமனையில் தரமற்ற பொருட்களால், தூய்மை பணியை செய்த தூய்மை பணியாளர் மூச்சு திணறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் ஐயப்பன் அக்கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.,காங்.,ல் சேர்ந்தார். அவர் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி கடற்கரை சாலையில்அமைக்கப்பட்ட செல்பி பாயிண்ட் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது . இரவு விநாயகர் புறப்பாடு நடந்தது. பக்தர்கள் சூரத் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.