வடலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த சொல்லப்பட்ட ரூபாய் 90 ஆயிரதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கோவை எஸ். என்.ஆர். , அரங்கத்தில் நடந்த தமிழ்நாடு கம்மவராயுடு எழுச்சி பேரவை சார்பில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாட்டத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
மார்ச் 22 உலக தண்ணீர் தினம்..... கிளம்பிட்டோம் பவானி ஆற்றை சுத்தம் செய்ய.......:மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு எஸ் எஸ் வி எம்., சி பி எஸ் சி பள்ளி மாணவர்கள் பவானி ஆற்றில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றினர்.
மேற்குவங்க சட்டசபை தேர்தலை ஒட்டி, வீடு வீடாக சென்று அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். கொல்கட்டாவின் கஸ்பா தொகுதியில் மூதாட்டியிடம் ஓட்டு சேகரித்த மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் திபு தாஸ்.
காஞ்சிபுரம் தாயார் குளத்தில், கச்சபேஸ்வரர் கோவில், இரண்டாம் நாள் தெப்போத்சவம் நடந்தது. இதில் சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கச்சபேஸ்வரர், தெப்பத்தில் ஐந்து சுற்று உலா வந்தார்.
கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ராம நவமி உத்சவத்தின் இரண்டாம் நாளில், ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்தார். இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.