நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான கடனுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் அன்பரசன், நேரு. இடம்:தலைமச்செயலகம், சென்னை.
அ.திமு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி.
தினமலர் செய்தி எதிரொலியால் விருத்தாசலம் வயலூர் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள தடுப்பு பட்டைகள் அகற்றப்பட்டு புதிய பட்டைகள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது .
திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.