
முத்தமிழ் சங்கம், மணிமேகலை பிரசுரகம் இணைந்து, புத்தக அறிமுக விழா திருப்பூர் பர்சூன் பார்க்கில் நடந்தது. அதில், தினமலர் அந்துமணி புத்தகங்களின் தொகுப்பை வாசகர் ஜெகதீசன், முத்தமிழ் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம்,உலக தமிழ் சங்க இந்திய ஒருங்கிணைப்பாளர் பெருமாள்,முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம், மணிமேகலை பிரசுரகம் ரவி தமிழ்வாணன். நடிகை கஸ்தூரி,நகரத்தார் சங்கம் நிர்வாகி பத்மநாபன், எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி, வாசகர் உதயகுமார் அறிமுகப்படுத்தினர்.
11-Mar-2024
இன்றைய போட்டோ13-Apr-2026
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் இணைப்பு மேம்பாலம், உள்வாங்கியது. இன்டர் லாக் முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதுடன், முதல் கட்டமாக சுமார் 240 அடி தூரம், சாலை ஒட்டுமொத்தமாக பெயர்ந்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.
13-Apr-2026
8/இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை
13-Apr-2026







